பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பல்வேறு சண்டைகளும் சர்ச்சைகளும் நடந்தேறியது. சாண்டி மற்றும் மதுமிதாவின் ஒரு புறம் இருந்தாலும் அதையே தூக்கி சாப்பிடும் விதமாக மீரா, சேரன் தன்னிடம் அத்து மீறி நடந்ததாக போட்ட நாடகம் தான் அனைவரையும் ஷாக்கில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் நாளை ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி குறித்து சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளைய நிகழ்ச்சியில் மீரா எலிமினேட் ஆவது உறுதியாகியுள்ளது. மேலும், இன்றைய நிகழ்ச்சியில் சேரன் காப்பாற்றபட்டார் என்று அறிவிக்க உள்ளார் கமல்.

இதையும் பாருங்க : சாண்டிக்கு வாய் ஜாஸ்தி.! ட்வீட் செய்த காஜல்.! என்ன இவர்களே இப்படி சொல்லிட்டாங்க.! 

Advertisement

அதே போல நாளைய நிகழ்ச்சியில் சரவணன் மற்றும் கவின் காப்பாற்றபட்டு விட்டார் என்று அறிவித்த அடுத்த நொடியே எந்த ஒரு தாமதமும் இன்றி மீரா வெளியேறியதை அறிவித்தாராம் கமல். அதே போல நாளைய ப்ரோமோ ஒன்றில் சீக்ரெட் ரூம் குறித்தும் பேசுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், நாளைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு ஹீரோ மற்றும் வில்லன் என்ற டாஸ்கை வைத்துள்ளாராம் கமல். அதில் சேரனை ஹீரோவாகவும் தர்ஷனை வில்லனாகவும் ஹவுஸ்மேட்ஸ்கள் தேர்ந்தெடுப்பார்களாம். இவை அனைத்தையும் நாளைய எபிசோடில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement