பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நாளில் நமிதா வாழ்க்கையில் நடந்த சம்பவம்

By Ajju · 5/12/2017
கடந்த மாத இறுதியில் நடிகை நமீதா மற்றும் அவரது நண்பர் வீரேந்திர சௌத்திரி ஆகிய இருவரும் திருப்பதி மலையில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் நெருக்கமான உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.நமீதாவுடன் சேர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சக்தி, நடன இயக்குனர் காயத்ரி மற்றும் காமெடி நடிகை ஆர்த்தி ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து நமீதா முன்னரே கூறி இருக்கிறார் வீர் எனக்கு தெரிந்த நண்பருடைய நண்பர் தான். கடந்த ஒரு வருடமாக தான் அவரை தெரியும். ஆனால் தற்போது அவருடன் திருமணம் செய்துகொண்டு நிற்கிறேன். எல்லாம் கனவில் நடந்தது போல இருக்கிறது. செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வீர் என்னிடம் கடற்கரை ஓரம் வைத்து திருமணம் செய்து கொள்கிறாயா எனக் கேட்டார். என்னால் பதில் சொல்லவே முடியவில்லை எனக்கு அழுகை வந்துவிட்டது. அன்று தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து மண உழைச்சலோடு வந்திருந்தேன். அப்போது எனக்கு ப்ரொபோஸ் செய்து என் வாழ்க்கையை மாற்றிவிட்டார், என நெகிழ்ச்சியாக கூறினார் நமீதா
Tamil Behind Talkies AMP · Quick view
View full