விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த சீசனில் அதிகம் பேசப்பட்டு வந்த விஷயம் என்னவென்றால் கவினின் காதல் கதைதான். லாஸ்லியாவிற்கு முன்னதாக கவின் மற்றும் சாக்ஸியின் காதல் கதைதான் வைரலாக பேசப்பட்டு வந்தது. அதன் பின்னர் கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு பிரிவு ஏற்பட்டு விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சாக்ஷி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமும் அடைந்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாக்ஷி, பிக் பாஸ் என்பதே லாக்டவுன் தான், அந்த லாக் டவுனை கடந்து வந்தால் இதை கடந்து சென்று விடலாம். பிக் பாஸ் வீட்டிற்குள் போன் இல்லாமலும் வெளியேறுவதற்கு தொடர்பு இல்லாமல் இருந்தது மிகப்பெரிய ஒரு அனுபவமாக இருந்தது. அந்த நிகழ்ச்சி மூலம் நான் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டேன். வாழ்க்கை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் நான் பிக் பாஸ் வீட்டில் பலவற்றை கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் சாக்ஷி.

இதையும் பாருங்க : பிக் பாஸ்ல அவங்க எவ்ளோ சிகெரெட் புடிச்சாலும், கெட்ட வார்த்த பேசினாலும் காட்டல- வெளுத்து வாங்கிய பிக் பாஸ் 3 போட்டியாளர்.

Advertisement

மேலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி கேள்வி கேட்கப் பட்டதற்கு பிக்பாஸ் வீட்டில் எனக்கு போட்டியாளர்களை பற்றிய எண்ணம் இருந்ததோ, அதே எண்ணம்தான் தற்போதும் இருக்கிறது. சொல்லப்போனால் நான் யாருடனும் பெரிதாக தொடர்பில் இல்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்ததை நான் அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களில் சேரனுடன் மட்டும்தான் பேசிக் கொண்டு வருகிறேன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அவருடன் எனக்கு பெரிய தொடர்பு இல்லை ஆனால், வெளியில் வந்த பிறகு அவருடன் மட்டும் தான் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சாக்ஷி .

சமீபத்தில் நடிகை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய முகத்தில் இருக்கும் கொழுப்பை கரைப்பது தான் என்னுடைய மிகப்பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய வகுப்பில் இருப்பவர்களே என்னை குண்டு பூசணிக்காய், களிமண் மண்டை என்றெல்லாம் கேலி செய்திருக்கிறார்கள் என்று கூறியுள்ள சாக்ஷி, கேளிகளுக்கெல்லாம் அஞ்சாதீர்கள் நம் தளபதி சொல்வதைப்போல அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார் சாக்ஷி.

Advertisement
Advertisement