விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் சாண்டி. தனது நடனம் மற்றும் நகைச்சுவையான குணம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாண்டி.

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது பயணத்தை துவங்கியவர் சாண்டி. தற்போது சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கொரியாகிராஃப் செய்யுமா அளவிற்கு வளர்த்துள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் சிரித்து வைத்துக்கொண்டிருக்கிறார் சாண்டி.

இதையும் பாருங்க : விஜய்யின் இரண்டாம் திருமண அறிவிப்பு வந்த நேரத்தில் அமலா பால் செய்த டீவீட்.! 

Advertisement

மாஸ்டர் சாண்டி, நடிகை காஜலுடன் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக காஜலை பிரிந்தார் சாண்டி. அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் நடைபெற்றது. மேலும், கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

எப்போதும் பிக் பாஸ் வீட்டில் கலகலவென இருந்து வரும் சாண்டி தனது இரண்டு கைகளிலும் பச்சை குத்தியுள்ளார். அதில் ஒரு புறம் c என்ற சிம்புலயும் மற்றொரு கையில் ஒரு பெண்ணின் முகத்தையும் பச்சை குத்தியுள்ளார். அது வேறு யாரும் இல்லை சாண்டியின் மனைவி சில்சியா தான்.

Advertisement

தனது காதல் மனைவியின் புகைப்படத்தை தான் சாண்டி பச்சை குத்திகொண்டுள்ளார். சாண்டியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சாண்டியின் மனைவி மற்றும் மகள் கூட பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டிருந்தனர். மேலும், கமல் கூட சாண்டியின் மகளை கைகளால் தூக்கினார்.

Advertisement
Advertisement