பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் இவர்தான்.! லாஸ்லியா கூட ஒட்டு போடல.!

By Rajkumar · 30/6/2019

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு வழியாக ஒரு வாரத்தை கடந்துவிட்டனர். கடந்த ஒருவாரமாக எண்ணற்ற சந்தோஷங்களும் சோகங்களும் சண்டைகளும் நிறைந்தே காணப்பட்டது. நேற்று(ஜூன் 29) ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அவர்களும் தனது வாழ்வில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை பேசியிருந்தார்.

இந்த நிலையில் இன்றோடு இந்த வாரத்திற்கான தலைவர் பதவி முடிவதால் இன்று (ஜூன் 30)ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் கமல் அடுத்த வாரத்திற்கான தலைவர் யார் என்பதை முடிவு செய்ய இருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் எந்த வார தலைவராக மோகன் வைத்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் இருக்கு புகைப்படத்தை பதிவிட்ட சௌந்தர்யா.! ஷாக்கடைந்த ரசிகர்கள்.! 

அதே போல சமீபத்தில் வெளியான போதிலும் இது உறுதியானது இன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது குழுவில் உலக நாயகன் கமல் போட்டியாளர்களிடம் இந்த வார தலைவருக்கான போட்டியில் 4 பேர் நிற்கலாம் என்று கூறுகிறார்.

அதன் பின்னர் இந்த வார தலைவர் போட்டிக்காக மோகன் வைத்யா, முகன் ராவ், மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா ஆகியோர் நிற்கின்றனர். இந்த வார தலைவர் பதவிக்கு போட்டியிடும் நபர்களில் யார் யாரெல்லாம் ஆதரிக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதன் பின்னர் இறுதியில் நின்றுகொண்டிருக்க மோகன் வைத்யாவிற்கு எட்டு பேர் ஆதரவளிக்கின்றனர்.

இதில் லாஸ்லியா, அபிராமி, சாக்க்ஷி, ரேஷ்மா, பாத்திமா, மீரா மிதுன் இவர்களை தவிர மற்ற அனைவருமே மோகன் வைத்யாவிற்கு வாக்களித்துள்ளனர். இதனால் இந்த வார பிக்பாஸ் வீட்டில் தலைவராக மோகன் வைத்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே போல மீரா மிதுனம் ப்ரோமோ வீடியோவில் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கூற கோபமடைந்த சரவணன் ஏற்கனவே தலைவராக இருந்தவர் பெண் தான் என்று கூறுகிறார்.

இதன் மூலம் மோகன் வைத்யா தான் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இதில் ஆச்சரியப்பட வேண்டியது என்னவென்றால் மோகன் பைத்தியம் அப்பா அப்பா என்று நொடிக்கு நொடி கூப்பிட்டுக் கொண்டிருக்கும் last year கூட மோகன் வைத்து அவருக்கு வாக்களிக்க வில்லை என்பதுதான் மிகவும் ஆச்சரியமான ஒன்று

Tamil Behind Talkies AMP · Quick view
View full