விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஒரு காதல் கதை இடம் பெற்றுவிடும் முதல் சீசனில் ஓவியா -ஆரவ் இரண்டாவது சீசனில் மகத் மற்றும் யாஷிகா மூன்றாவது சீஸனில் அபிராமி – முகேன், கவின்- லாஸ்லியா, தர்ஷன்- ஷெரின் என்று பல காதல் கதைகள் ஓடியது. அதே போல தான் இந்த சீசன் ஆரம்பத்தில் பாலாஜி மற்றும் கேபி இருவருக்கும் காதல் இருப்பது போல காண்பிக்கப்பட்டது. ஆனால், அது எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. மேலும், ஷிவானி – பாலா காதல் கதையும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

இதையும் பாருங்க : விமல் வீட்டில் நடந்த விசேஷம் – தன் குடும்பத்துடன் நேரில் சென்ற விஜய் சேதுபதி (இன்னும் தொடரும் நட்பு)

Advertisement

சமீபத்தில் கூட தனது நாய் குட்டிக்கு பிறந்தநாளை கொண்டாடிஇருந்தார். இந்த கொண்டாட்டத்தில் பாலாஜி, சம்யுக்தா, ஆஜீத் ஆகியோரும் கலந்துகொண்டு இருந்தனர். அதே போல ஷிவானி தனது பிறந்தநாளை கொண்டாடிய போது பாலாஜியும் அந்த கொண்டாட்டத்தில் இருந்தார். அப்போது ஷிவானி அம்மா முன்பே பாலாஜி கேக் ஊட்டிவிட்டார்.

பாலா மற்றும் ஷிவானி இருவரும் காதலித்து வந்தார்கள் என்று தான் பலரும் நினைத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இன்று சகோதர சகோதரிகள் கொண்டாடும் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பாலாஜி, ஷிவானிக்கு இன்ஸ்டாக்ராமில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதற்கு ஷிவானியும் நன்றி டா பாலா என்று பதில் அளித்து உள்ளார்.

Advertisement
Advertisement