Ticket To Finaleவை வென்று இறுதி போட்டிக்கு நுழைந்த நபர் - 2 புள்ளிகளில் வாய்ப்பை தவறவிட்ட போட்டியாளர்.

By ·

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 13 வாரங்களை கடந்து 14 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.

இதுவரை துவங்கங்கப்படாமல் இருந்த கோல்டன் டிக்கெட் டாஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன் தான் துவங்கியது. Ticket To Finale டாஸ்க் என்றால் பெரும்பாலும் பிஸிக்கல் டாஸ்க்காக தான் இருக்கும். ஆனால், இந்த சீசனில் பெரும்பாலும் விவாதம் அடிப்படையில் தான் டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. ஆனால், நேற்று துவங்கிய இறுதி மற்றும் எட்டாம் டாஸ்க் தான் கொஞ்சம் கடுமையாக இருந்து வருகிறது. இதுவரை 7 டாஸ்க்குகள் முடிவடைந்தது .

இதையும் பாருங்க : இறுதி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர் - Ticket To Finale டாஸ்க்ல பட்ட கஷ்டம் எல்லாம் போச்சே.

இந்த ஏழு டாஸ்கின் முடிவின்படி சோம் சேகர் தலா 39 புள்ளிகளை எடுத்து முதல் இடத்தில்இருந்தனர். இருக்கு அடுத்தபடியாக ரியோ 37 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார், அவரை தொடர்ந்து 32 புள்ளிகளுடன் ஷிவானி மூன்றாம் இடத்திலும் இருந்தனர். ஒருவேளை நேற்று ரியோ 7 புள்ளிகளை பெற்று இருந்தால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். அனால், நேற்று சோம்க்கு முன்பாகவே ரியோ டாக்ஸை முடித்து 3 புள்ளிகளை எடுத்தார். ஆக, அவர் தற்போது 40 புள்ளிகள் தான்.

நேற்றய 7 ஆம் டாஸ்க் முடிவின்படி சோம் சேகர் தான் 39 புள்ளிகளுடன் முதல் இடம் வகித்து வந்தார். நேற்றய இறுதி டாஸ்கில் சோம் 4வது டாஸ்கை விட்டதால் அவருக்கு 4 மதிப்பேன் எனவே, அவர் 43 புள்ளிகளை எடுத்துள்ளார்.எனவே, வெறும் 2 புள்ளிகளில் டிக்கட் டு பின்னாலே வாய்ப்பை தவறவிட்டுள்ளார் ரியோ. இன்று ஷிவானி 7 புள்ளிகளை எடுத்தால் கூட அவருக்கு மொத்தம் 39 புள்ளிகள் தான் கிடைக்கும். எனவே, வெறும் 2 புள்ளி வித்யாசத்தில் டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார் சோம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full