இறுதி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர் – Ticket To Finale டாஸ்க்ல பட்ட கஷ்டம் எல்லாம் போச்சே.

0
3125
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 13 வாரங்களை கடந்து 14 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.

-விளம்பரம்-

கடந்த வாரம் ரியோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் இந்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் அவரை நாமினேட் செய்ய முடியாது என்று பலரும் நினைத்தனர். இறுதி வாரத்தில் ரியோவை கேப்டனாக்கி அவரை இறுதி போட்டிக்கு அனுப்ப விஜய் டிவி திட்டமிட்டுவிட்டது என்று பல விமர்சனங்கள் எழுந்தது. அதே போல இந்த வாரம் நாமினேஷன் கூட நடைபெற்றது. ஆனால், இறுதி வாரம் என்பதால் இந்த முறை அனைவருமே நாமினேட் செய்யப்பட்டு உள்ளதாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

- Advertisement -

எனவே, யார் யார் இறுதி போட்டிக்கு செல்வார் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இந்த வாரம் டிக்கெட் டு பினாலேக்கான போட்டிகளும் நடைபெற்றது. இதில் நேற்றோடு இறுதி போட்டி முடிந்த நிலையில் ரம்யா மற்றும் ஷிவானி இறுதியாக நின்று வருகின்றனர். ஆனால், இதில் ரம்யா அல்லது ஷிவானி வெற்றி பெற்றாலும் அவர்களால் டிக்கெட் டு பின்னாலே டாஸ்கை வெல்ல முடியாது.

நேற்றய 7 ஆம் டாஸ்க் முடிவின்படி சோம் சேகர் தான் 39 புள்ளிகளுடன் முதல் இடம் வகித்து வந்தார். நேற்றய இறுதி டாஸ்கில் சோம் 4வது டாஸ்கை விட்டதால் அவருக்கு 4 மதிப்பேன் எனவே, அவர் 43 புள்ளிகளை எடுத்துள்ளார். ஒருவேளை ரம்யா பாண்டியன் 7 புள்ளிகளை எடுத்தாலும் அவர் 38 புள்ளிகளை தான் பெறுவார். எனவே, டிக்கெட் டு பின்னாலே டாஸ்க்கில் சோம் தான் வெற்றியாளர் என்று உறுதி ஆகிவிட்டது.

-விளம்பரம்-

எனவே, ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி இருவருமே டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வென்றாலும் பயன் இல்லை. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் ஷிவானி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement