சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். பின் நடிகை வனிதா 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

டிகை வனிதா அவர்கள் ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது நடிகை வனிதா அவர்கள் தனியாகத்தான் தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். நடிகை வனிதாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளார்கள். சமீபத்தில் கூட இவர்களின் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement

இதையும் பாருங்க : எவ்வளவு திட்டினாலும் சூடு சொரணை இல்லையா. ஏன் இப்படி என்னை காப்பி அடிக்கிறீங்க – மீரா மிதுன் ட்வீட்.

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை வனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அனைவர் கண்களுக்கும் சொர்ணாக்காவாகவே தெரிந்தார் வனிதா விஜயகுமார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வந்தார் வனிதா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா அவர்கள் குக் வித் கோமாளி, சீரியல் என்று பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

அதிலும் இவர் பங்குபெற்று வந்த குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சி நேற்று (பிப்ரவரி 24) நிறைவடைந்தது. இதில் வனிதா முதல் இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள்ளாக வனிதா கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க போகிறாராம். இதனை உறுதி செய்யும் வகையில் வனிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபீ புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, #Kpy சீசன் 9 என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement