பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார்.வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள். திருமணத்திற்கு பின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு ரீ- என்ட்ரி கொடுத்தது விஜய் டிவி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமடைந்த வனிதா பின்னர் விஜய் டிவியின் பல நிகழ்சகளில் பங்கேற்றார். அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.இதில் இவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்ரவர்த்தி பங்கேற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விள்குவதாக அறிவித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : போஸ்டர் எல்லாம் வெளியான நிலையில் மணிரத்னம் படத்தில் இருந்து விலகிய சமந்தா – எந்த படம் தெரியுமா ?

Advertisement

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வனிதா, ஒருவர் கேலி செய்யப்படுவதையும் துன்புறுத்தப் படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் அது என் குடும்பத்தினரும் இருந்தாலும் சரி என்பதை இந்த உலகுக்கே தெரியும் விஜய் டிவி தான் எனக்கு பல வாய்ப்புகளை கொடுத்தது இருவரும் பரஸ்பர மரியாதை உண்டு. அது எப்போதும் நீடிக்கும்.

ஆனால், வேலை செய்யும் இடத்தில் தொழில் முறையில்லாத நெறி முறையற்ற நடத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணவத்தால் என் வளர்ச்சியை தாங்க முடியாத ஒருவர் எனக்கு தொல்லை கொடுத்து, அவமானப்படுத்தி மோசமாக நடத்தினார். பணியிடங்களில் ஆண்கள் மட்டும் பெண்களை மோசமாக நடத்துவதில்லை, பெண்களும் பொறாமை கொண்டு மோசமாக நடத்துகிறார்கள் நீங்கள் வாய்ப்புகளை அழிக்கிறார்கள்.

Advertisement

கடுமையாக உழைத்து முன்னேறிய ஒரு மூத்தவர் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை தரம் தாழ்த்தி பார்ப்பது அவர்களை அவமானப் படுத்துவதை வேதனையாக உள்ளது குடும்பம் கணவர் பெற்றோர்கள் ஆதரவு இல்லாமல் ஒரு தனி பெண்ணாக மூன்று குழந்தைகளுக்கு தாயாக சாதித்துவரும் ஒரு பெண்ணை இப்படி நடத்துகிறார். ஒரு பெண் தான் இன்னோரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் , அவர்களை வயதில் மூத்தவர்கள் வென்று விடுவார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையை மறந்து விட்டார்கக் என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisement

வனிதாவின் இந்த பதிவை பார்த்த பலரும் வனிதா விலகியதற்கு ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்றும் வனிதா நடனத்தை ரம்யா கிருஷ்ணன் மதிப்பிடுவது வனிதாவிற்கு பிடிக்கவில்லை என்று கூறி வருகின்றனர். அதே போல வனிதா, ஒழுங்காக நடனம் ஆடவில்லை என்றாலும் அவரை யாரும் குறை சொல்லக்கூடாது ரம்யா கிருஷ்ணன் மீது இருக்கும் பொறாமையில் தான் வனிதா இப்படி மறைமுகமாக ரம்யா கிருஷ்ணனை குறை சொல்கிறார் என்றும் வனிதாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement