தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அம்மணிக்கு தமிழில் தான் இன்னும் வாய்ப்பு பெரிதாக வரவில்லை.
திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் நடிப்பில் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.
இதையும் பாருங்க : இரண்டாம் திருமணம் நின்றதுக்கு சங்கி தான் காரணம் – BJPயை பங்கம் செய்த காஜல்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பேமிலி மேன் வெப் தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பல எதிர்ப்புகளை மீறி இந்த வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது.
இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா, மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் நடிகை சமந்தா தான் முதலில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் கூட வெளியான நிலையில் சமந்தா இந்த படத்தில் இருந்து விளகினார். அதன் பின்னர் தான் ராதா மகள் துளசி நாயர் இந்த படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.