கடந்த மாதம் நடக்கவே கஷ்டப்பட்ட யாஷிகா, புதிய வீட்டு பங்ஷனில் எப்படி நடக்கறாங்க பாருங்க - வீடியோ இதோ.

By Rajkumar · 12/11/2021

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

https://twitter.com/chettyrajubhai/status/1453729083137802247

அதே போல தன் உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : உலகின் சிறந்த ஹாஸ்பிடல், ஆனால் நீங்க குணமாகிடும்னு போனீங்க - டாப் ஹாஸ்பிடலை கிழித்து தொங்கவிட்ட ஜாக்லின்.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரும் யாஷிகா அடிக்கடி தண்னுடைய உடல் நிலை குறித்து தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் விபத்திற்கு முதன் முறையாக பின் எழுந்து நடந்த வீடியோ ஒன்றை பதிவிட்டு 95 நாட்களுக்கு முன் குழந்தை போல முதல் அடி எடுத்து வைக்கிறேன் என்று கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=PYGGDJ-ZO8Q

அந்த வீடியோவில் மிகவும் நடக்கவே கஷ்டப்பட்டார் யாஷிகா. இப்படி ஒரு நிலையில் யாஷிகா குடும்பத்தினர் புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கின்றனர். அந்த வீட்டின் கிரஹபிரவேச வீடியோ ஒன்றை யாஷிகாவின் நெருங்கிய நபர் ஒருவர் யூடுபியூபில் பதிவிட்டு இருக்கிறார். அதில் யாஷிகா முன்பை போல மிகவும் சாதாரணமாக தான் நடந்து இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full