தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார். மேலும், தமிழ் சினிமாவிலும் அதிக அளவு பிரபலமானார் மற்றும் இந்த ஒரு படத்திலேயே அதிக அளவிற்கு ரசிகர்களை ஈர்த்தார்.

அந்த படத்தின் இரட்டை அர்த்த வசனங்களை பேசி இளசுகளை ஈர்த்த யாஷிகா, பின்னர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம்ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது. யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று கூட சொல்லலாம்.

இதையும் பாருங்க :இத விட நான் மோசமா பேசுவ. சீமானை மீண்டும் கடுமையாக விமர்சித்த லாரன்ஸ்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் கிடைத்த வண்ணம் இருக்கிறது. அதே போல இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஏற்பட்டது இவரது சமூக வலைதள பக்கங்கள் தான் என்றும் கூறலாம். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதனால் இவரை ரசிகர்கள் தமிழ் சினிமாவின் மியா கலீபா என்றும் கூறி வருகின்றனர்.

அதே போல அம்மணி அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயங்களை செய்து தனது சொந்த ரசிகர்களிடமே வாங்கி கட்டிக்கொள்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிருக்கு சென்றிருந்த யாஷிகா மேடையில் நின்று கொண்டு இருக்கும் போது அவருக்கு ஆண் நபர் ஒருவர் குடைபிடிக்க வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் யாஷிகாவை கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், அற்பனுக்கு வாழ்வு வந்தால் ஆம்பளையா வச்சி குடைபிடிப்பீங்களா.என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement


Advertisement
Advertisement