வாய்ப்பிற்காக இயக்குனர் ஒருவர் உதட்டில் முத்தம் கொடுக்குமாறு கேட்டதாக யாஷிகா பேசி இருக்கும் வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்.

இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

Advertisement

இதையும் பாருங்க : பிரபல நடிகையாக திகழ்ந்த இவரை நினைவிருக்கா ? இப்படி எப்படி இருக்கார் பாருங்க. (வா அருகில் வா படத்தை 90ஸ் கிட்ஸ் மறக்க முடியுமா ?)

யாஷிகாவிற்கு ஏற்பட்ட விபத்து :

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது.

Advertisement

விபத்தால் பறிபோன வாய்ப்புகள் :

விபத்திற்குப் பின்னர் யாஷிகாவால் சரியாக நடக்க முடிய வில்லை என்பதால் அவர் நடித்து வந்த படங்கள் மற்றும் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலிருந்தும் தற்காலிகமாக விலகி இருந்தார். இறுதியாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், தான் முன்பைப் போல டாஸ்க்குகளை செய்ய முடியாது என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார் யாஷிகா.

Advertisement

இயக்குனர் குறித்து Metoo புகார் :

தற்போது விபத்தில் இருந்து தேறி வந்துள்ள யாஷிகா மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பட வாய்ப்பு தருவதாக இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியில் தொல்லை கொடுத்ததை கூறி இருக்கிறார். அதில் பேசியுள்ள அவர் ‘நான் ஒரு இயக்குனரை பட வாய்ப்புக்காக சந்தித்திருந்தேன். அப்போது அவர் எனக்கு ஒரு ஏர்போர்ட் சீன் நடித்துக் காண்பிக்க வேண்டும். நான் இன்று கிளம்ப போகிறேன். அதனால் நான் தான் ஹீரோ என்று நினைத்துக் கொண்டு நீங்கள் என்னை லிப் கிஸ் செய்ய வேண்டும்.

யாஷிகா சொன்ன ஷாக்கிங் சம்பவம் :

நீங்கள் நன்றாக செய்தீர்கள் என்றால் ஓகே, இல்லை என்றால் நான் சொல்லித் தருகிறேன், அது ஓகே என்றால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார். ஆனால், நான் அவரிடம் முதலில் நீங்க ஹீரோ கிடையாது அடுத்தது நான் மிகவும் சின்ன பெண் அதனால் லிப் கிஸ் எல்லாம் படத்திலேயே பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். மேலும், நான் எதற்கு உங்களிடம் நடித்துக் காண்பிக்க வேண்டும் என் அம்மாவை கூப்பிடுங்கள் என்று சொன்னேன். ஆனால், உடனே அவர் என் அருகில் வந்து என்னை கட்டி அணைக்க பார்த்தார் உடனே நான் அவரை தள்ளிவிட்டு வெளியில் வந்து என் அம்மாவிடம் கிளம்பலாம் என்று சொல்லிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே யாஷிகா கொடுத்த பேட்டி :

ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு பெரிய இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் புகழ் பெற்ற பெரிய இயக்குனர் ஒருவரை நான் சந்திக்க சென்றேன் ஒரு ஹீரோவின் தந்தையை போன்ற அவரின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை என் அம்மா மூலம் அவர் என்னை பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தார் ஆனால் எனக்கு நேரடியாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருந்தால் நான் நிச்சயம் புகார் அளித்திருப்பேன் என்று கூறி இருந்தார்

Advertisement