தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான, முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். இவரை அனைவரும் கேப்டன் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். இவர் நடிகர் என்று சொல்வதை விட சிறந்த அரசியல்வாதி என்றும் சொல்வார்கள். நடிகர் விஜயகாந்த் அவர்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் ஆவார். இவர் தன்னுடைய முழு கவனத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி வருகிறார். தற்போது இவருக்கு 67 வயது ஆகிறது. ஆனால், இப்போது கூட அவர் குழந்தை போன்று தான் நடந்து கொள்கிறார் என்று இவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வார்கள். இவர் இதுவரை தமிழ் மொழி படங்கள் தவிர வேறு எந்த மொழி படங்களிலும் நடித்து கிடையாது. நடிக்க வாய்ப்பு வந்தாலும் அந்த வாய்ப்பை இவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

Advertisement

இவருடைய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இவர் அதிகமாக படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், சமூக சேவைகளைச் செய்யும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து உள்ளார். நடிகர் விஜயகாந்த் அவர்கள் முன்னாள் நடிகர் சங்கத்தின் தலைவரும் ஆவார். நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் போது இவர் சிறப்பாக நடத்தி வந்தார். முன் காலத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா என்று கேலி செய்தவர்கள் முகத்தில் கரியைப் பூச செய்தவர். மேலும், நம்மைக் கிண்டல் கேலி செய்தவர்கள் முன்னாடி நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தவர். நடிகர் விஜயகாந்த் அவர்கள் சினிமா உலகத்தை விட்டு அரசியலில் மாற்றத்தை உருவாக்க பல முயற்சிகளை செய்து வந்தார்.

இதையும் பாருங்க : தனிப்பட்ட விருப்பங்களுக்கு என்னை பயன்படுத்தி விட்டார். மேனேஜர் மீது குற்றம் சாட்டிய அடங்கமறு பட நடிகை.

Advertisement

ஆனால், இவருடைய உடல் நலக்குறைவு காரணமாக செய்ய முடியாமல் போனது. இவருக்கு எவ்வளவு சிகிச்சைகள் மேற்கொண்டது. ஆனால், இவரை பூரண குணம் செய்ய முடியவில்லை. பின் சிகிச்சைக்காக பல வெளிநாடுகளுக்கும் சென்றார்கள். ஆனால், அதுவும் பயன் அளிக்கவில்லை. ‘சாதாரண மனுஷனுக்கு தான் ஷாக்கடிக்கும், ஆன இந்த நரசிம்மாவ பார்த்த அந்த கரண்ட்டுக்கே ஷாக் கொடுக்கும்’ என்று வீரமாக இருந்த மனுஷனை இப்போது உடல் நிலை குன்றி பார்க்கும் போது கவலையாக உள்ளது என்று பலர் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு சினிமா உலகிலும், நிஜ வாழ்க்கையிலும் நல்ல பெயரை வாங்கியவர்.

Advertisement

இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை கேப்டன் விஜய்காந்த் அவர்கள் தன்னுடைய குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடினர். மாட்டுப்பொங்கலன்று கொண்டாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளார். நடிகர் விஜயகாந்த் அவர்களின் வீட்டு செல்லப் பிராணிகள் நந்தினி பசுவும், உப்பிலி அதாவது கன்றுக்கும் சக்கரைப்பொங்கல் ஊட்டி மாட்டு பொங்கலை கொண்டாடினார்கள்.

இதை தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்கள். அதனை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் கேப்டன் சீக்கிரம் குணமடைய வேண்டும். அவர் தமிழ் நாட்டுக்கு ரொம்ப முக்கியம் என்று பல கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். இவருக்கு என்ன பிரச்சனை எதனால் இப்படி ஆனது என்ற காரணத்தை இன்னும் முழுவதுமாக கூறவில்லை.

Advertisement