பட்டியலின பெண்களை பற்றி நடிகர் கார்த்தி தவறாக பேசியிருக்கும் சர்ச்சை தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகியாக திகழ்பவர் சுசித்ரா. இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் ரேடியோ மிர்ச்சியில் சேர்ந்து மீடியாவிற்குள் நுழைந்தார். அதற்குப் பிறகு இவர் பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார். அதற்கு பின்பு இவர் சினிமாவில் பாடவும் ஆரம்பித்தார். பின்பு தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் பாடி இருக்கிறார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

Advertisement

சுசித்ரா-கார்த்திக் குமார் குறித்த தகவல்:

இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், தன் தரப்பு நியாயத்தை சுசித்ரா கூறியிருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாடகி சுசித்ரா, என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பணத்தைக் கொடுத்து என்னை பற்றி தவறாக சித்தரித்து வருகிறார். அவரும் தனுஷும் சேர்ந்து குடித்து விட்டு ஒரு அறைக்குள் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த அறைக்குள் அவர்கள் சென்றால் என்ன செய்வார்கள்? என்று எனக்கு தெரியும். அதேபோல் எனக்கு திருமணமாகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்தது என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

கார்த்திக்குமார் பதிவு:

இதை பார்த்த நடிகர் கார்த்திக் குமார், நான் ஒரு ஓரின சேர்க்கையாளராக இருந்தேன் என்றால் நிச்சயம் அதை பொது வழியிலேயே பகிரங்கமாக சொல்லுவேன். அது சொல்வதற்கு எனக்கு எந்த கூச்சமும் கிடையாது. ஓரினச்சேர்க்கையாளர்கள் நடக்கும் அனைத்து முன்னெடுப்புகளிலும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலுமே கலந்து கொள்வேன். அதற்கு நான் ஓரின சேர்க்கையாளராக இருக்க வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. அவர்களுக்காக குரல் கொடுக்க ஒரு நல்ல மனிதனாக இருந்தாலே போதும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement

சுசி வெளியிட்ட ஆடியோ:

இதை அடுத்து சுசித்ரா அவர்கள் கார்த்திக் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நீ அசிங்கமா பேசுற. இதெல்லாம் படித்தவர்கள் பேசுற மாதிரி இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுற மாதிரி இருக்கு. நீ ஏன் இப்படி பேசுற? உன் வளர்ப்பு இப்படி இல்லையே. உன் வளர்ப்பு நல்ல வளர்ப்பு தானே. நீ பிராமின் குடும்பத்தை சேர்ந்தவள் தானே, பற,பள்ள முண்டங்கள் தான் இப்படியெல்லாம் பேசும் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இப்படி கார்த்தி பேசியிருந்த வீடியோ இணையத்தில் வெளியானது தொடர்ந்து பலருமே விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

கார்த்தி மீது புகார்:

இதை அடுத்து கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் அப்படி பேசவில்லை. இது என்னுடைய குரலும் இல்லை. நான் அந்த மாதிரியான வார்த்தைகளை பேசுபவன் கிடையாது என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளகுமுறு முத்து அவர்கள் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன்பின் 15 நாட்களுக்குள் கார்த்திக் மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசியப் பட்டியலின ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதோடு அந்த ஆடியோ மட்டும் கார்த்திக் பேசியது என்று உண்மையானால் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Advertisement