சமீப காலமாகவே சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வைக்கிறார்கள். சமீபத்தில் கூட பழம்பெரும் நடிகை சாவித்திரி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார்கள். சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா.

Advertisement

ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. சகிலா படம் ரிலீசாகும் என்றால் அங்கு பிற ஸ்டார்களின் படங்கள் கூட ஓடாது. அந்த அளவிற்கு சகிலா கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். மேலும், இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழிகளில் இவர் படங்களில் நடித்து உள்ளார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : பட வாய்ப்புக்காக படுக்கையில். ஸ்ரீரெட்டி பாணியில் சர்ச்சையை கிளப்பிய டிக் டாக் ராணி.

Advertisement

இந்நிலையில் இவருடைய வாழ்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார்கள். இந்த படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். பாலிவுட் நடிகையான இவர் நடிகர் அலி பைசூல் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெறுவதாக தேதி குறிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டிருப்பது. இதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருந்தது.

Advertisement

இந்த நிலையில் உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரசால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த கரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. ஆகவே படத்தின் படப்பிடிப்புகள், நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் இந்த கரோனா வைரசால் நடிகை ரிச்சா சத்தா அவர்களின் திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் 2020 ஆம் ஆண்டு கண்டிப்பாக நடைபெறும் என்று மட்டும் அறிவித்திருந்தார்கள். மேலும், இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படமாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் இந்திரஜித் லங்கேஜ் இயக்குகிறார். 16 வயதில் சினிமாவில் நுழைந்த சகிலாவின் சினிமா வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு ‘நாட் ஏ பாம்ஸ்டார்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி இருந்தது.

Advertisement