மெர்சல் படம் தீபாளிக்கு வர ஆவலாக காத்துக்கிடக்கின்றனர் தளபதி விஜயின் ரசிகர்கள். ஆனால், அடுத்தடுத்து படத்திற்கு வரும் தடைகள் ஓய்ந்தபாடில்லை.
அந்த தடைகளையும் தாண்டி படத்தை திரைக்கு கொண்டு வர மும்மூரமாக வேலை செய்து வருகிறது தயாரிப்பாளர் தரப்பு. அதற்கும் மேலாக, பல இடங்களில் கான்பிடென்ட்டாக டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்டனர்.
இப்படத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்தும் காட்சிகள் வருகிறது. இதில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை எதிர்த்து பேசினார்.
இதனால் அப்போது ஒன்றும் செய்ய இயலாத அந்நிறுவனம், தற்போது இந்த படத்திற்கு பிரச்சனைகள் ஏற்ப்படுத்தி தளபதியை எதிர்க்க நினைக்கிறது, என்ற செய்தி சமூக வலை தளங்களில் வைரலாக பரவியுள்ளது.