பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் 2010 ஆம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப் படத்தின் மூலம் தான் பாலிவுட் திரைப்படத் துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.இதனிடையே இவர் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகை தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Omg 😱. Why does she treat him like that 😔 poor soul
— Parcae (@Moonstarepeep) March 24, 2023
my man Ranveer stand up for yourself and divorce this gold d!gger.
FreeRanveer#RanveerSingh #DeepikaPadukone https://t.co/32ZUJrIhT8 pic.twitter.com/vUkij7YBrA
நடிகை தீபிகா படுகோன் அவர்கள் பல ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். இவர் பாலிவுட்டில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். இவர் நடிகை மட்டுமில்லாமல் விளம்பர அழகியும் ஆவார். இவர் கன்னடம், தமிழ், இந்தி ஆகிய பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஐம்பது படங்களுக்கும் மேல் நடித்து இருக்கிறார். சமீபத்தில் கூட இவர் நடித்த “பாதான்” திரைப்படத்தில் வரும் பாடலினால் பெரும் சர்ச்சை வெடித்தது.
காதல் திருமணம் :
இந்நிலையில் தீபிகா- ரன்வீர் சிங் இருவரும் ஆறு வருடமாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமணம் கடந்த 2018ஆம் ஆண்டு இத்தாலியில் மிக பிரமாண்டமாக நடந்தது. திருமணத்துக்கு பின்னரும் தீபிகா படுகோன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் சினிமாவில் பிரபலமான ஜோடிகளில் இவர்களுக்கு ஒரு ஜோடியாக இருக்கின்றனர்.
Omg 😱. Why does she treat him like that 😔 poor soul
— Parcae (@Moonstarepeep) March 24, 2023
my man Ranveer stand up for yourself and divorce this gold d!gger.
FreeRanveer#RanveerSingh #DeepikaPadukone https://t.co/32ZUJrIhT8 pic.twitter.com/vUkij7YBrA
கருத்து வேறுபாடுகள் :
ஆனால் சமீப காலமாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இடையே பல விதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருவதாகவும். அதனால் கூடிய விரைவில் இருவரும் பிரிய வாய்ப்பு இருக்கிறது என பல விதமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியது. ஆனால் இந்த தகவலை இருவரிடமும் நெருக்கமாக இருக்கும் நபர்கள் மறுத்துள்ளனர். இந்த நிலையில் தான் இவர்கள் இருந்து பிரித்து வாழ்கின்றனர் என்று மற்றவர்கள் சொல்லும் அளவிற்கு சம்பவம் ஓன்று நேற்று நடந்துள்ளது
ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் நிகழ்ச்சி :
அதாவது மும்பையில் நேற்று ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒரே நிற உடையில் ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவி தீபிகா படுகோன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிவப்பு கம்பளம் மீது ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் நடந்து வரும் போது ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனின் கைகளை பிடிக்க முயன்றார். ஆனால் நடிகை தீபிகா ரன்வீரின் கைகளை பிடிக்காமல் மறுத்து விட்டார். அதோடு ரன்வீரையும் பார்க்கவில்லை. இதனால் கலக்கமடைந்த ரன்வீர் முன்னேறி சென்று விட்டார்.
Divorce coming very soon
— Bimal (@bimalkumarh) March 24, 2023
மீண்டும் பிரச்னையா? :
இந்த வீடியோ வைரலான நிலையில் ரன்வீர் சிங்கிற்கும் அவரது மனைவி தீபிகா படுகோனுக்கும் இடையே ஏதாவது பிரச்னையா? இருவரும் விவாகரத்து செய்ய போகின்றனரா? ஏன் இருவரும் ஒன்றாக நடந்து வரவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தீபிகா மற்றும் ரன்வீர் இருவருமே விவாகரத்து செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாகவே சர்ச்சை கிளப்பிய நிலையில் இந்த சம்பவம் எரியும் தீயில் எண்ணேய் ஊற்றியது போல ஆகியுள்ளது.