சினிமாவில் தற்போது தான் பல திருநங்கைகளை நம்மால் பார்க்க முடிகிறது. சினிமாவில் எத்தனையோ திருநங்கைகள் நடித்தாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே நம் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “தர்மதுரை” படத்தில் திருநங்கையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் திருநங்கை ஜீவா சுப்பிரமணியம்.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராதிகா, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ராஜேஷ் என்று பலர் நடித்த தர்மதுரை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளராக ஒரு திருநங்கையாகவே நடித்தவர் திருநங்கை ஜீவா சுப்பிரமணியம்.

இதையும் பாருங்க : அன்று வைஷாலி, இன்று தீபிகா – மூன்றாவது முறையாக மாற்றப்படும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் ?

Advertisement

தர்ம துரை படத்தை தொடர்ந்து இவர் தர்பார் படத்தில் கூட நடித்து இருந்தார். மேலும், இவர் நடித்த ‘அவன் நங்கை’ என்ற குறும்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இவர் சினிமா வாய்ப்பிற்காக பல கம்பெனிகளில் ஏறி இறங்கிய போது, ‘நீ என்ன நயன்தாராவா,பெரிய ஸ்டார்னு நினைப்பா? என்றெல்லாம் கூட கேலிகளை இவர் சந்தித்து இருக்கிறாராம்.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், தர்ம துரை படத்தின் போது விஜய் சேதுபதி தனக்காக டென்சன் ஆனதை குறித்து பேசியுள்ளார். அதில், தர்மதுரை படத்தில் நடித்த போது அங்கு இருந்தவர்கள் சிலர் அவரை 9 என்று சொல்லி கேலி செய்து உள்ளனர். அப்போது விஜய் சேதுபதி அவர்களை அசிங்க அசிங்கமாக திட்டி, என் தங்கச்சிடா இவ என்று கூறியதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ஜீவா சுப்பிரமணியம்.

Advertisement
Advertisement