தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா என்ற தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. இந்த தொடரில் டாம் பாய்யாக நடித்துவரும் சாயிஷா பல இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

 இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இந்த தொடருக்கு முன்னாள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த `பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஆயிஷா, இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அந்த தொடரில் இருந்து விலகினார்.

இதையும் பாருங்க : அட, ஜில்லா படத்தில் வந்த குட்டி பொண்ணு இவங்க தானா ? யாருனு தெரியுதா ?

Advertisement

மேலும், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆயிஷா, தெலுங்கு சீரியலில் என்கூட ஹீரோவாக நடிக்கிறவருடன் நான் எடுத்திருந்த புகைப்படங்களை நியூஸா போட்டு எங்களுக்கு திருமணம் ஆகிடுச்சுன்னே சொல்லிட்டாங்க. நான் ஓப்பனா சொல்றேன்.. ஐ அம் சிங்கிள் என்று கூறியிருந்தார்.

ஆனால் , சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற குறும்பட இயக்குனர் ஒருவர், ஆயிஷாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும்,ஆனால் அவரை அவர் விவாகரத்து செய்துவிட்டு பின்னர் தன்னை காதலித்ததகவும் கூறியிருந்தார். மேலும், தன்னை காதலித்த போதே சத்யா தொடரில் நடித்து வரும் விஷ்ணுவுடன் அவர் தொடர்பில் இருந்தார் என்றும் அந்த பேட்டியில் கூறி இருந்தார். மேலும், தன்னுடன் ஆயிஷா இருக்கும் சில புகைபடங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். ஆனால், அவர் அளித்த பேட்டியை தற்போது யூடுயுபில் இருந்து நீக்கியுள்ளனர்.

Advertisement
Advertisement