தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். மலையாள மொழியில் மெகா சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் மம்மூட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் 2012 ஆம் ஆண்டு ‘செகண்ட் ஷோ’ என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து “தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும்” என பல படங்களில் நடித்து உள்ளார். இவர் வாயை மூடி பேசவும் என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

Advertisement

மேலும், முதல் படத்திலேயே நடிகர் துல்கர் சல்மான் பெரிய அளவு பிரபலமானார். அதை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரான மணிரத்னம் அவர்கள் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற திரைப் படத்தில் நடித்தார். தமிழில் இவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவு ஹிட்டுக் கொடுத்தது. அதன் பின்னர் நடிகையர் திலகம் என்ற திரைப் படத்தில் நடித்து உள்ளார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.தற்போது நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் தன்னுடைய நடிப்பு திறமை மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர்.

இதையும் பாருங்க : சூப்பர் சிங்கர் திவாகர் திருமணம். வெங்காயம் மற்றும் கொசு பேட்டை பரிசாக அளித்த பிரபலங்கள். புகைப்படம் இதோ.

இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து உள்ளார். அதில் தன்னுடைய ரகசியங்களைப் பற்றி மனம் திறந்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, எனக்கு கதாநாயகிகளுடன் படத்தில் நெருக்கமாக காட்சியில் அதாவது intimate காட்சியில் நடித்தால் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும். அதை அந்த நடிகைகளே எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அது மட்டும் இல்லாமல் என் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்று கூட இறுதியில் அவர்கள் கண்டு பிடித்து சொல்லுவார்கள். அப்போது நான் அவர்கள் முன் தலை குனிந்து நிர்வாணமாக நிற்பது போல இருக்கும் என்று மனம் திறந்து பேசி உள்ளார்.

Advertisement

Advertisement

இதை கேட்ட பலரும் நடிப்பில் ஜாம்பவானான மம்முட்டி மகனுக்காக நடிப்பில் இப்படி ஒரு பிரச்சனை என்று முணுமுனுத்து வருகின்றனர். நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் அமல் சுபியா என்பவரை 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் மம்முட்டியின் மகனாக இருந்தாலும் சினிமா உலகில் தன்னுடைய கடும் உழைப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளார். தன் தந்தையைப் போலவே துல்கர் சல்மான் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement