நயன்தாரா கலெக்டராக நடித்து சமீபத்தில் வெளியான படம் அறம். இப்படம் சமூக அக்கரை உள்ள படமாக எடுக்கப்பட்டதால் மக்களிடையே ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றது.
அதிலும் கலெக்டராக இறங்கி வேலை செய்யும் போது ஒரே ஒரு க்ரே கலர் சேலை மட்டுமே அணிந்திருப்பார். இதற்க்கு காரணம் யாது என படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் கூறியுள்ளார்.
“படத்தின் கதையைக் கேட்டவுடன் ஒரு சமூக அக்கரை உள்ள இப்படத்தில் இது போன்று தான் லைட் செட் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். மேலும், வரண்டு போன நம் மண்னை குறிக்கும் விதமாக படத்தில் வரும் கலெக்டர் நயன்தாராவிற்கு க்ரே கலர் சேலையுடன் அதற்கேற்ற லைட்டில் காட்டினால் தான் அதன் நிலைமை தெரியும்.