சமந்தா, பகத் பாசிலை தொடர்ந்து அரியவகை நோயால் பிரபல நடிகை பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க, கடந்த சில வருடத்திறகு முன் சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.

இது ஒரு வகையான தசைய அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணம் அடையவில்லை. இதனால் இவர் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்து கடந்த ஆண்டு சினிமாவை விட்டு விலகி சிகிச்சை எடுத்து இருந்தார் சமந்தா. தற்போது இவர் பூரணமாக குணம் அடைந்து விட்டார்.

Advertisement

பகத் பாசில் நோய்:

அதே போல் மலையாள நடிகர் பகத் பாசிலும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் பேட்டியில் அறிவித்திருந்தார். இவருக்கு மூளை நரம்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஏடிஹெச்டி என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது கவனக்குறைவு, அதிக செயல்பாடு என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சி கோளாறு. இது மூளையின் கவனம், நடத்தை, உந்துவிசை கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கும். இது குழந்தைகளில் பொதுவானது ஆனால், பெரியவர்களையும் பாதிக்கும்.

நடிகை அடா சர்மா பாதிக்கப்பட்ட நோய்:

இந்த நிலையில் இந்தி நடிகை அடா சர்மாவும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர் எண்டோமெட்ரியோசிஸ் என்ற நோயால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர், இந்த நோயால் இடுப்பில் எனக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அது எனக்கு நரக வேதனை வலியையும் தந்தது. சுமார் 48 நாட்களுக்கு மேல் நான் மென்சஸ் பிரச்சினையால் அவஸ்தைப்பட்டேன்.

Advertisement

ரசிகர்கள் ஆறுதல்:

ஏற்கனவே படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தால் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் நான் படத்திலும் நடித்தேன் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்திருந்த பேட்டி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே இவருக்கு ஆறுதலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். ஹிந்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அடா சர்மா. இவர் தமிழில் ‘சார்லி சாப்ளின் 2’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆகி இருந்தார்.

Advertisement

அடா சர்மா திரைப்பயணம்:

அதற்கு பின் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. மேலும், இவர் படங்களில் மட்டும் இல்லாமல் விளம்பரங்களில் கூட நடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்த படத்தில் யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி யோகிதா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் இந்தியில் உருவாகி பேன் இந்திய படமாக வெளியாகி இருந்தது.

Advertisement