திரைப்படம் பைனான்சியர் மகள் கடத்தல், ஏன் தெரியுமா - அதிர்ச்சியில் திரையுலகம்

By Ashok · 4/3/2018
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, திருப்பி தர முடியாமல் கஷ்டப்படும் தயாரிப்பாளர்களை கொடூரமாக துன்புறுத்தியதன் காரணமாக கைது செய்யப்ட்டவர் பைனான்சியர் போத்ரா. இவருடைய மகள் கரிஷ்மா போத்ரா கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை என போலீசில் புகார் செய்தார் கந்துவட்டி போத்ரா. இதனால் அவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது, என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் போத்ராவின் வீடு உள்ள பகுதியான தி நகர் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையம் கைப்பற்றி அதனை ஆராய்ந்து வருகிறது போலீஸ். இதற்கு முன்னர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை துன்புறுத்தியதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசால் போத்ரா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full