ஆரவின் வெற்றி குறித்து காயத்திரி ட்விட்டரில் சொன்னது என்ன?

By ·
கடந்த நூறு நாட்களாக தமிழக மக்கள் பெரும்பாலானோர் அதிகம் உச்சரித்த வார்த்தை என்றால் அது பிக் பாஸ் தான். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கான சீசன் 1 முடிந்து அதற்கான வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டது நாம் அறிந்ததே. ஆரவின் வெற்றியை தொடர்ந்து பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஒரு சிலர் ஆரவின் வெற்றியை ஏற்கவும் மறுக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முக்கிய போட்டியாளராக இருந்த காயத்திரி, ஆரவின் வெற்றி குறித்து ஒரு டீவீட்டை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஆரவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, இதற்கு நீ தகுதியானவன் என்றும் கூறியுள்ளார். இதோ அந்த ட்வீட்.
Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை