கடத்த சில காலமாக சினிமா துறையில் நடிகைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று பல குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் பிரபல மலையாள சீரியல் நடிகையிடம் பாலியல் உருவுக்காக ரேட் பேசிய நபருக்கு செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை. 

ஏசியா நெட்டில் ஒளிபரப்பான பரஸ்பரம் என்ற தொடரில் நடித்து புகழ்பெற்றவர் காயத்ரி அருண். தற்போதும் பல தொடர்களில் நடித்து வருகிறார். காயத்ரி அருண் சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

Advertisement

கடந்த சில தினங்களாக அவரது பேஸ்புக் முகவரியில் ஒருவர் தினமும் ஆபாச செய்திகள் அனுப்பி வந்துள்ளார். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார் காயத்திரி.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர், “நீங்கள் ஒரு நாள் இரவு என்னுடன் தங்கினால் 2 லட்சம் ரூபாய் தருகிறேன். ஒரு மணி நேரம் தங்கினாலும் போதும்” என்று தகவல் அனுப்பி உள்ளார்.

இதற்கு பதில் சொல்லியிருக்கிற காயத்ரி அருண். 
,உங்கள் தாய், மற்றும் சகோதரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும்போது கேட்டுக் கொள்கிறேன் என்று செருப்படி பதிலை அளித்துள்ளார். 

Advertisement
Advertisement