அல்டிமேட் ஸ்டார் அஜித் கடந்த சில ஆண்டுகாளாகவே எந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கோ, பாராட்டு விழாவிற்கோ கலந்து கொள்வது இல்லை. அவ்வளவு ஏன் தனது படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கோ, வெற்றி விழாவிற்கோ கூட அஜித் கலந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

இறுதியாக கலைஞர் பாராட்டு விழாவின் போது நேரடியாக இனி தங்களை பொது நிகழ்ச்சிக்கோ, அரசியல் நிகழ்ச்சிக்கோ நடிகர்களை வற்புறுத்துகிறார்கள் என்று பேசிய வீடியோ பெரும் வைரலும் ஆனாது. அதன் பின்னர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்வது இல்லை.

இதையும் படியுங்க : அமெரிக்கா ஹோட்டலில் மகனை சந்தித்த விஜய்.! வைரலாகும் புகைப்படம்.! 

Advertisement

அதே போல 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் அஜித் கலைஞர் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். அதன் பின்னர் அவர் வேறு எந்த ஒரு பேட்டியிலும் நிகழ்ச்சியிலும் கூட கலந்து கொண்டது இல்லை. இந்த நிலையில் அஜித், ஏன் பேட்டி கொடுப்பது இல்லை என்று அஜித்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டி கண்ட நீயா நானா கோபிநாத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், நான் அஜித்தை பேட்டி எடுத்த போது கோபிநாத்திடன், நடிகர் அஜித், சார் நான் ஆரம்பத்தில் தமிழை தவறாக பேசினேன், அப்போது ஒரு மாதிரி பேசினார்கள். சரி, அதன் பின்னர் ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்தேன் , உடனே ஒரு தமிழ் நடிகன் ஆங்கிலத்தில் பேசுவதா? என்று அதற்கும் திட்டினார்கள்.

Advertisement

அதன் பின்னர் இனி பேசவே வேண்டாம் என்று முடிவு செய்தேன், ஆனால், அதன் பின்னர் அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா, பேசமாட்டாரா? என்று கூறினார்கள், என்ன செய்வது என்றே தெரியாமல் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன் என்று கூறியுள்ளார் அஜித்.

Advertisement
Advertisement