கந்து வட்டியில் 20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை இழந்தேன் ! பிரபல நடிகர் உருக்கம் ?

By Ajju · 23/11/2017
கந்துவட்டிக் கொடுமையினால் நேற்று, நடிகர் சசிகுமாரின் மைத்துனர் மற்றும் இணை தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டார். இது போன்ற கந்து வட்டிக் கொடுமையினால் இனிமேல் எந்த ஒரு இழப்பும் ஏற்ப்பட்டுவிடக் கூடாது என திரைத் துறையில் இருந்து பலரும் கூறி வருகின்றனர். மேலும், பலரும் அந்த குறிப்பிட்ட நபரால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தான் வாங்கிய வெறும் 20 லட்சம் ரூபாய் கடனுக்காக அப்போது வளசரவாக்கத்தில் இருந்து 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான என் வீட்டை விற்று அந்த கடனை ஆடைத்தேன் எனக் கூறினார். இதையும் படிங்க: விஜய் மற்றும் கமலை பின்னுக்கு தள்ளினார் சிவகார்த்திகேயன் ! ஆச்சரியத்தில் ரசிகர்கள்? மேலும், அவர் கூறியதாவது, 'அப்போதிலிருந்து இன்னும் ஒரு சரியான படம் பண்ணினால் உடனடியாக அந்த வீட்டை வாங்கிவிடலாம், என தற்போது வரை 13 வருடம் ஆகி விட்டது. என் வாழ்கையில் செய்த பெரும் தவறு அது தான். விற்ற அந்த 75 லட்சம் ரூபாய் பங்களா தற்போது 7 கோடி ரூபாய் போகும், ஆனால், நான் யாருக்கும் 10 பைசா பாக்கி வைக்கவில்லை,' எனக் கூறினார் பார்த்திபன்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full