கிரிக்கெட் விளையாட்டையும் நட்பையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘சென்னை-28’ படத்தின் முதல் பாகமும், இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஷ்வின், “ ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகம் ரொம்ப நன்றாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்துவிட்டது. என்னால் முடிந்திருந்தால் இந்த படத்தில் நானும் ஒரு பங்கு வகித்திருப்பேன்” என்று அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.