விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் ‘சிரிச்சாப் போச்சு’ நிகழ்ச்சியின் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானவர் பழனிபட்டாளம். ‘அறம்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுக்கத் தொடங்கியுள்ளார். படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் பலரின் கைதட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்றார். அவரிடம் ஒரு ஜாலி சாட்!
‘நயன்தாரா மேமை பத்தி நான் சொல்லித்தான் தெரியணும்னு இல்ல, தமிழ்நாட்டுக்கே தெரியும், ‘லேடி சூப்பர் ஸ்டார்’னு. கூட சேர்ந்து வொர்க் பண்றோம்னு நினைக்கும்போதெல்லாம் கிள்ளிப் பாத்துக்குவேன்.
ஷூட்டிங்ல நடிக்குறது மட்டுமில்லாம நிறைய வொர்க் பண்ணுவாங்க. அவங்களுக்கு வெயிட் பண்றதும் பிடிக்காது. டக்கு டக்குனு ஷாட் போயிடணும், ‘நான் நிக்குற இடம் கரெக்டா, லைட்டிங் கரெக்டா வருதா’ இது மாதிரியான விஷயங்களை கேட்டுகிட்டே இருப்பாங்க. துணை இயக்குநர் மாதிரிதான் இருப்பாங்க.
ஒரே லொக்கேஷன்ல ஷூட்டிங் நடந்தது, என்னென்ன சவால்கள் இருந்தது?
”பகல், இரவு ரெண்டு நேரங்கள்லயும் ஷூட்டிங் இருக்கும். ராத்திரி கூட ஒண்ணும் தெரியாது. பகல் டைம்ல அங்க இருக்குற ஒரே பிரச்னை வெயில் மட்டும்தான். ‘எப்போடா நிழல் வரும்’னு வேண்டிகிட்டு இருப்போம். அடிக்குற வெயில்ல நான் ஒருமுறை மயங்கி விழுந்துட்டேன். கும்பலா ஓடி வரணும், போலீஸ் அப்போ தடியடி நடத்தும். திரும்ப ஓடணும். இந்த சீனுக்காக நிறைய நேரம் அங்கேயும் இங்கேயும் ஓடிகிட்டே இருந்தேன்.