தமிழ் நாட்டில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது என்றால் அது மிகையாகாது. ஒரு பக்கம் ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து தீவிரம் காட்டுகிறார். மறுபக்கம் கமல் வெளிப்படையாகவே தான் தீவிர அரசியலில் இறங்கப்போவதாக கூறியுள்ளார். ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்பே நடிகர் விஜய் அரசியலுக்கு வரைவார் என சில வருடங்களுக்கும் முன்பு எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் அவர் தீவிரமாக செயல்படுவார். கொடுத்த வேலையை சரியாக செய்யும் திறன் விஜய்யிடம் இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சி என எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.

Advertisement

 

Advertisement