தமிழ் சினிமா உலகில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை மாளவிகா மேனன். இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த “இவன் வேற மாதிரி” என்ற படத்தில் ஹீரோயினின் தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தின் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் அருவா சண்ட என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்துக்காக நடிகை மாளவிகாவை கவர்ச்சி உடை அணிந்து நடிக்க வேண்டும் என்று படத்தின் இயக்குனர் ஆதிராஜன் கூறினார்.

இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில் கதாநாயகி மாளவிகா மேனன் மிக கவர்ச்சியான ஆடை அணிந்து தான் ஆட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். அதற்கு நடிகை மாளவிகா இதுவரை இப்படிப்பட்ட டிரஸ் அணிந்து ஆடியதில்லை என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். இதனால் சுமார் ஒருமணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நடன இயக்குநர் ராதிகாவும் மாளவிகாவுக்கு எடுத்துச் சொன்னார்.

இதையும் பாருங்க : அதுக்குன்னு கண்ட சாக்கடை எல்லாம் விஜய் ஆக முடியுமா – வனிதாவை கழுவி ஊற்றிய விஜய் ரசிகர்கள்.

Advertisement

ஒரு வழியாக கடைசியில் வேறு சில உடைகளை தைத்துக் கொடுத்து நடிகை மாளவிகாவை பாடல் காட்சியில் நடிக்க வைக்கப்பட்டதது. மேலும், சமாதானம் அடைந்த மாளவிகா கொட்டும் அருவியில் நனைந்தபடி அந்த பாடலுக்கு ஆடிக்கொடுத்தார். இப்படி படப்பிடிப்பு தளத்தில் ஆர்ப்பாட்டம் செய்த அம்மணிக்கு தமிழில் பட வாய்புகள் குறைய தொடங்கியது. பிற மொழிகளிலும் அம்மணிக்கு இதே நிலைமை தான்.

சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நாம் அம்மணி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் இவர் கிரகத்தின் புகைப்படங்களை இவன் வேற மாதிரி படத்தில் குடும்ப குத்துவிளக்காக வந்த இவர் நிஜ வாழ்க்கையில் படு மாடர்ன் மங்கையாக இருக்கிறார்

Advertisement
Advertisement