தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் திரைப்படத் துறையில் மிகப் புகழ் பெற்ற நடிகை என்று சொல்லலாம். இவர் 1969 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி 2018 ஆம் ஆண்டு வரை சினிமா உலகில் பயணத்தார். இவர் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஸ்ரீ தேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து உள்ளார். இதுவரை இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் கலை துறையில் ஆற்றிய பணிக்காக பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார். பின் நடிகை ஸ்ரீ தேவி அவர்கள் பாலிவூட்டில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி அவர்கள் சிவகாசியில் பிறந்து வளர்ந்தாலும் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தார். இவர் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக உயர்ந்து பின் அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டார். இவரது மரணம் இந்திய சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இவரைப் போலவே இவருடைய மகள் ஜான்வி கபூரும் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தற்போது குஞ்சன் சக்சேனா, ரூஹி அஃப்ஜா, தோஸ்தானா 2 ஆகிய திரைப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனுடன் நெட்ஃப்ளிக்ஸ் திரைப் படமான ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ நெட்ஃப்ளிக்ஸ் படத்திலும் ஜான்வி நடித்து வருகிறார் என்று தெரிய வந்து உள்ளது.

இதையும் பாருங்க : பிரபுதேவாவை அடுத்து கமல் நடித்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபுதேவாவின் சகோதரர்.

மேலும், தன் அம்மா ஸ்ரீதேவியை வளர்த்து விட்ட தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் கூடிய விரைவில் வரப்போவதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி பட ஹீரோ விஜய் தேவர்கொண்டா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஜான்விடம் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள். ஆனால், ஜான்வி கபூர் நடிக்கவில்லை என்று மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பூரி ஜெகநாத் அவர்கள் இயக்கும் படம் பைட்டர்(fighter). இந்த படத்தை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படம் தெலுங்கு, இந்தி என இரு மொழிகளிலும் உருவாகிறது. இந்தியில் இந்த படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

மேலும், இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகை ஜான்வி கபூர் அறிமுகமாக உள்ளார் என்ற எதிர்பார்ப்பார் எழுந்தது. இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு 3.5 கோடி சம்பளம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக படத்தில் நடிகை ஜான்வி கபூர் நடிப்பதில்லை என்ற தகவல் திடீரென்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் மறுத்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள். இந்த படத்தில் அத்வானியும் கூட கால்ஷீட் பிரச்சனையால் மறுத்து விட்டார். இப்போது அனன்யா பாண்டே அவர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என்றும் கூறுகிறார்கள்.

Advertisement