நாம் அன்றாடம் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் செய்திகளை கேள்விபட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் மற்ற துறைகளை விட சினிமா துறைகளில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் ஏராளம். அதனை ஒரு சிலர் வெளிப்டையாக கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகையான காஜல் அகர்வால் தனது தோழிக்கு நடந்த ஒரு பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் காஜல் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : நடிகை காஜல் அகர்வால் அட்டை படத்திற்கு இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளாரா.! 

Advertisement

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காஜலிடம் சினிமா துறையில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சினிமா துறையில் பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று பல நடிகை கூறுகின்றனர். அது பொய் என்று தனக்கு தோன்றவில்லை.

என்னை யாரும் இப்படி படுக்கைக்கு அழைத்தது இல்லை. ஆனால், ஒரு முறை எனது தோழியிடம் தவறாக நடக்க முயன்றவரின் சட்டை காலரை இழுத்து பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அடித்துள்ளேன் என்று கூறியுள்ளார் காஜல்.

Advertisement
Advertisement