கெளதமி சம்பல பாக்கி கேட்டதற்க்கு கமல் சொன்ன ஒரு வார்த்தை !

By Ajju · 27/2/2018
நடிகர் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் செய்த பிறகு கமலுக்கு பல தரப்பில் இருந்து விமர்சனங்களும் வார்த்தை போர்களும் உருவாகி உள்ளது.நடிகை கௌதமியும் கமல்ஹாசனும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக லிவின்-டு-கெதர் வாழ்க்கையில் வாழ்ந்தவர்கள் ஆவார்.கடந்த ஆண்டு கௌதமியின் பெண் குழந்தை நலனுக்காக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் நரிகர் கமல்ஹாசன் தனக்கு சம்பள பாக்கி வைத்துள்ளார் என கௌதமி ஒரு குண்டை தூக்கி போட்டார். இதனை விஷயத்தை இத்தனை நாள் பேசாமல் இருந்த கௌதமி கமல் அரசியல் பிரவேசம் செய்தவுடன் கூறியுள்ளார். இது குறித்து பதில் அளித்த ராஜ்கமல் பிலிம்ஸ், கௌதமிக்கு சம்பள பாக்கி கிடையாது. அனைத்தையும் கொடுத்தாகிவிட்டது. இனி கௌதமி தான் நாங்கள் சம்பளம் கொடுக்காததற்கு ஆதாரத்தை காட்ட வேண்டும் என கூறியது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ். இது குறித்து தற்போது பேசியுள்ளார் கமல்ஹாசன், இந்த விஷயங்களை கம்பெனி தான் டீல் செய்கிறது. சம்பள பாக்கி இருந்தால் ராஜ்கமல் பிலிம்ஸ் பார்த்துக்கொள்ளும். இது குறித்து நான் பேச தேவை இல்லை என கூறி பிரச்சனையை முடித்துவிட்டார் கமல்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full