நடிகையிடம் சில்மிஷம்! நான் இருந்திருந்தால் அவன் காலை உடைத்திருப்பேன் - பிரபல நடிகை அதிரடி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டங்கல் படத்தில் நடித்த சாய்ரா வாசிமிற்கு அவர் பயணம் செய்த விமானத்தில் பாலியல் ரீதியாக சீண்டல் இருந்ததாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். மேலும், அப்படி சீண்டியதாக கூறப்பட்ட நபர் சாய்ராவின் சீட்டில் கை வைக்கும் இடத்தில் காலை வைத்திருந்ததாக கூறப்படுகிறது
இது குறித்து விளக்கம் அளித்த சம்மந்தப்பட்ட நபரின் மனைவி அவருக்கு உடல் நிலை சரியில்லை இதனால் தவறுதலாக அவரது கால் பட்டிருக்கலாம் எனவும் விளக்கம் அளித்தார். இருந்தும் இது குறித்து புகார் அளித்த சாய்ராவை , பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்த்தாக பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் சாய்ராவிற்கு ஆதரவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பேசியுள்ளார். அதாவது, என்னிடம் அப்படி சீட்டில் யாராவது காலை வைத்திருந்தால் அவனது காலை உடைத்திருப்பேன் எனக் கூறினார் கங்கனா.