உங்கள் கணவர் என்ன பண்றார்.! ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரியின் இரட்டை அர்த்த பதில பாருங்க.!
தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. தற்போது சர்ச்சைக்குரிய நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி இந்த வயதில் போட்ட குத்தாட்டமும், அடிக்கடி சமூக வைத்தளத்தில் பதிவிட்டு வரும் சர்ச்சையான பதிவுகளும் தான்.
https://twitter.com/KasthuriShankar/status/1107258515813367808
கஸ்தூரி, ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சன்கல்ப் என்ற ஒரு மகனும் சோபினி என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். ஆனால், நடிகை கஸ்தூரி தனது கணவருடன் இன்னும் சேர்ந்து வாழ்ந்து வருகிறாரா என்பது தெரியவில்லை. அப்படி நினைக்க காரணம் , அவருடன் இருக்கும் புகைப்படங்களை கூட நடிகை கஸ்தூரி சமூக வளைத்தளத்தில் பதிவிட்டது இல்லை.
இதையும் படியுங்க : தொடை முழுவதும் வெளிச்சம் போட்டுக் காண்பித்து பேட்டி கொடுத்த கஸ்தூரி.! இதெல்லாம் தேவையா.!
சமீபத்தில் நடிகை கஸ்தூரி இளையராஜா 75 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பங்கேற்றார். அப்போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு 'சன் டிவியில் வரும் இந்த தொகுப்பாளனி எனக்கு மிகவும் பிடிக்கும்' என்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கண்டு பலரும் பல்வேறு விதமான கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர்.
இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ட்விட்டர் வாசி, ஒருவர் வயசானாலும் உன் அழகு மிரட்டுது முடியல, உன் ஹஸ்பண்ட் என்ன பண்றார்' என்று கமெண்ட் அடித்தார். இதற்கு பதிலளித்த கஸ்தூரி 'என்ன பண்றார்' என்று சிரித்தபடி ஒரு ஸ்மைலியுடன் பதிலளித்தார். இந்த பதிலை இணையதளத்தில் பலரும் கஸ்தூரி இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார் என்று பரப்பி வருகின்றனர். உங்களுக்கு ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கு கஸ்தூரி சொன்னது புரியவில்லை.