தமிழ் ரசிகர்கள் பலரின் மனம் கவர்ந்த நாயகியாக வளம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நடித்துள்ள அஞ்ஞாதவாசி என்ற தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது.

பவன் கல்யாண், குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற கீர்த்தி சுரேஷ் தலையில் ஒரு கொண்டை போட்டுகொண்டு சென்றார். இதை கவனித்த நெட்டிசன்கள், இது என்னடா ஜிலேபி கொண்ட என அவரை கலாய்க்க துவங்கினர்.

Advertisement

இதனை அடுத்து சமீபத்தில் நடந்த மற்றொரு விழாவில் இது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், நான் கொண்டை போட்டுகொண்டு வந்தது அவ்வளவு பெரிய குத்தமா ? இதற்கு ஏன் இப்படி கலாய்கறீர்கள் என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே:
பொங்கல் ரேஸில் இத்தனை படங்களா ! ரேஸில் விலகப்போகும் படம் எது ?

Advertisement

கீர்த்தி சுரேஷின் இந்த கேள்விக்கும் நெட்டிசன்கள் மீம்ஸ் மூலமாக பதில் அளித்தாலும் ஆச்சர்யம் இல்லை.

Advertisement
Advertisement