தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். அதன் பின்னர் அஜித்தின் ‘வில்லன்’, கமலஹாசனின் ‘அன்பே சிவம்’ போன்ற படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ படத்தில் தான்.அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தார் நடிகை கிரண்.ஆனால் அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழில் ஒரு சிலகாலம் காணாமல் போன கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ திரைப்படத்தில் விஷாலின் அத்தையாக நடித்திருந்தார்.இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் கிரண். இப்படி ஒரு நிலையில் ரஜினி நடித்த ‘பாபா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக நடிகை கிரண் தெரிவித்து உள்ளார்.

இதையும் பாருங்க : அந்த படத்தில நான் வில்லனா நடிக்கிறேன்னு சொன்னேன் – தனுஷுடன் மிஸ் ஆன படம் குறித்து விஜய் சேதுபதி.

Advertisement

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த கிரண் ”கடந்த ஆறு மணி நேரமாக ‘பாபா’ படத்தின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட்ட காரணமாகக் கூட இருக்கலாம். அப்போது நான் ‘ஜெமினி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் என்னால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை.

நடிப்பிலும் நடனத்திலும் அவரை யாராலும் தொடமுடியாது என்று இப்போதும் நான் சொல்வேன்” என்று கூறியுள்ளார் கிரண். சமீப காலமாக கிரண் எந்த படத்திலும் நடிக்கவில்லை இதனால் சொந்தமாக ஒரு App-ஐ உருவாக்கி அதில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பதிவிட்டு வருகிறார்.மேலும், இதை பார்ப்பதற்கு கட்டணமும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement