மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகையை ஞாகபம் இருக்கா ? இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா. சினிமாவுக்காக ரக்ஷிதா என்று பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். இவருடைய அப்பா கௌரி சங்கர் என்பவர் சினிமாவில் பிரபலமான சினிமாடோக்ராஃபர் ஆவார். மேலும், இவருடைய அம்மா மம்தா ராவ் அவர்களும் பிரபலமான நடிகை ஆவார். இதன் மூலம் தான் நடிகை ரக்ஷிதாவுக்கு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2002 ஆம் ஆண்டு இயக்குனர் புனித் ராஜ்குமாரின் இயக்கத்தில் ‘அப்பு’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் நடிகை ரக்ஷிதா சினிமா உலகிற்கு வந்தார்.

பின் நடிகை ரக்ஷிதா அவர்கள் 2003 ஆம் ஆண்டு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வெளியான ‘தம்’ என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இந்த படத்தில் வந்த ‘சாணக்கியா சாணக்கியா’ என்ற பாடல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மதுர திரைப் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள்.

இதையும் பாருங்க : மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் 5 பேர் பரிதாப பலி – அதிர்ச்சியளிக்கும் தகவல்

Advertisement

ஆனால், அதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரக்ஷிதா தான் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்திற்கு பின்னர் அவர் தமிழ் மொழி படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கில் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், நாகர்ஜுனா, ரவி தேஜா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

அதோடு இவர் கன்னடம், தெலுங்கில் தான் அதிகம் வலம் வந்தார் என்று சொல்லலாம். சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் அரசியலில் குதித்தார். பின்னர் பாஜக கட்சியில் சேர்ந்தார்.பிறகு நடிகை ரக்ஷிதா கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்புக்கு குட் பாய் சொல்லி விட்டார். பின் குடும்ப வாழ்க்கையிலேயே செட்டிலாகி விட்டார் என்று சொல்லலாம்.

Advertisement

மேலும்,இவர்களுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். அதோடு நடிகை ரக்ஷிதா அவர்கள் ஒரு குழந்தைக்கு தாயாகிய உடன் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு ஊதி போய் இருக்கிறார். மேலும், இவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் இது நடிகை ரக்சிதாவா?? என அதிர்ந்து போய் உள்ளார்கள்

Advertisement
Advertisement