தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் மீனாவின் கணவர் இறந்துள்ள சம்பவம் திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நடிகை மீனா மற்றும் வித்யாசாகர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். மேலும், திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் பிறந்தனர். நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். திருமணத்திற்கு பின்னரும் நடிகை மீனா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் இறந்து உள்ள தகவல் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்திருக்கிறது. இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்த போது ஏற்பட்ட நோய் என்று கூறப்படுகிறது.

Advertisement

இதையும் பாருங்க : சத்யராஜ் வாழ்ந்த பூர்வீக வீட்டை இடித்துவிட்டு கட்டப்பட்ட வளாகம். அவர் படித்த பள்ளி, தங்கையின் மருத்துவமனை. அறிய வீடியோ

கொரோனா தொற்று :

அதாவது பெங்களூரில் அவருடைய வீட்டுக்கு பக்கத்தில் நிறைய புறாக்கள் வளர்க்கப்படுகிறது.அதன் அலர்ஜி ஏற்பட்டு சுவாச பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. பின் சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்று சரியானாலும் நுரையீரல் பிரச்சனை வித்யாசாகருக்கு இருந்துகொண்டேதான் இருந்தது.

Advertisement

உடல் உறுப்பு கிடைப்பதில் தாமதம் :

இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிற ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆரம்பத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்கள். அதற்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து நுரையீரல் தானம் கிடைக்கறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

Advertisement

மீனாவின் கணவர் இறப்பு:

ஆனால், உறுப்புக்கள் கிடைப்பதில் தாமதமானதால் அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்திடலாம் என்று முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் நாளுக்கு நாள் வித்யாசாகர் உடல்நிலை மோசமடைந்தது. இறுதியில் இவர் காலம் ஆகி இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் மீனாவின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

மன்சூர் அலிகான் வேண்டுகோள் :

மீனா கணவரின் இறப்பிற்கு இன்று காலை முதலே பல்வேரு பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்ற மன்சூர் அலிகான், இரங்கல் தெரிவித்துவிட்டு பேட்டி அளித்த போது ‘அஜின மோட்டோ, விதையில்லாத காய்கறிகள், ரசாயன காய் கறிகளை தான் தமிழ் நாட்டில் நாம் உண்ணுகிறோம். பாஸ்ட் புட் போன்றவற்றை தான் நாம் வீட்டில் சமைத்து உண்டு கொண்டு இருக்கிறோம். இனியாவது அதை உண்ணுவதை நிறுத்துங்கள்’ என்று உருக்கமுடன் பேசி இருக்கிறார்.

Advertisement