பஹத் பாஸில் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி மாரி செல்வராஜ் போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி இருந்தது. பொதுவாக ஒருபடம் திரையரங்கில் வெளியான போது வரும் விமர்சனங்களை விட அதே படம் Ottயில் வெளியாகும் போது தான் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படும். அந்த வகையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான போது சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டதை விட தற்போது தான் சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

அதிலும் குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக நடித்த பகத் பாஸிலின் கதாபாத்திரத்தை ஹீரோ போல மாற்றி பல்வேறு நடிகர்களின் பாடல்களை எடிட் செய்து ஒரு சிலர் கொண்டாடி வருகின்றனர். ராஜ ராஜ சோழனுக்கு பின்னர் அனைத்து ஜாதியினரும் உரிமை கொண்டாடியது ரத்னவேலுவை தான் என்று பலர் கேலியாக கூறி வந்தனர். அதே சமயம் சாதி வெறி பிடித்தவர்கள் தான் ரத்னவேல் கதாபாத்திரத்தை கொண்டாடி வருகின்றனர் என்று பலர் விமர்சித்தனர்.

இப்படி ஒரு நிலையில் இன்று பஹத் பாஸில் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்க்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜ், பஹத் பாசிலின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘வணக்கம் பகத் சார்.

Advertisement

உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

Advertisement

மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ஆனால், மாரி செல்வராஜின் இந்த பதிவிலும் பஹத் பாஸிலின் ரத்னவேல் கதாபாத்திரத்தை கொண்டாடும் வகையிலான ஜாதி பாடல்கள் அடங்கிய எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை போட்டு வருகின்றனர். ஏற்கனவே, பஹத் பாஸில் தனது முகநூல் பக்கத்தில் மாமன்னன் படத்தின் ரத்னவேல் புகைப்படங்களை வைத்து இருந்தார். ஆனால், அந்த பதிவிலும் ஜாதி பிரியர்கள் போட்ட கமண்ட் தொல்லையால் அந்த பதிவையே நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement