சினிமாவைப் பொருத்தவரை பல்வேறு அறிமுக நடிகை கள் தங்களது முதல் படத்திலேயே மாபெரும் பிரபலத்தை அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை அடைந்தவர் நடிகை ஆத்மிகாபிரபல பாப் பாடகர் இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக அறிமுகமான ‘மீசையமுறுக்கு’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மீகா. இந்த படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Advertisement

அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற மாட்டிக்கிச்சே என்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை இந்த படத்தில் நடித்த ஆத்மிகா விருக்கும் சமூகவலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கள் கூட துவங்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு பின்னர் அம்மணியை வேறு எந்த படத்திலும் காணமுடியவில்லை இருப்பினும் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அம்மணி. மீசைய முறுக்கு படத்தில் கவர்ச்சிக்கு கராராக இருந்து வந்த ஆத்மீகா, தற்போது மாடர்ன் உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

இதையும் பாருங்க : இரண்டாம் திருமணம், மூன்றாம் முறையாக கர்ப்பமாக இருக்கும் சபாஷ் பட நடிகை திவ்யா உன்னி.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது நடிகை ஆத்மீகா, வைபவின் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் கவலை வேண்டாம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கிய டீகே தற்போது வைபவ் நடித்து வரும் ஆர். கே நகர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா என 3 ஹீரோயின்கள் ஏற்கனவே கமிட் ஆகியுள்ளார். மேலும் இந்த படத்தில் 4 வது ஹீரோயினாக நடிகை ஓவியாவை கமிட் செய்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளாராம் ஓவியா. இதனால் அந்த படத்தில் அவரை கமிட் செய்யமுடியாமல் போக தற்போது 4வது ஹீரோயினியாக யாரை போடலாம் என்று தேடி வருகிறாராம் இயக்குனர். இதனால் நடிகை ஆத்மிகா ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அம்மணி கொஞ்சம் சோகத்தில் இருந்து வருகிறாராம்.

Advertisement
Advertisement