பார்த்திபன் நடிப்பில் வெளியான சபாஷ் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமான திவ்யா உன்னி தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டு முன்றாவது முறையாக கற்பமாக இருக்கும் செய்தி தான் சினிமா வட்டாரத்தில் ஹட் டாப்பிக்காக இருந்து வருகிறது. நடிகை திவ்யா மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதுமட்டும் இல்லாமல் நடிகை திவ்யா அவர்கள் ஒரு சிறந்த பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். அதுமட்டும் இல்லாமல் நடிகை திவ்யா அவர்கள் பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம் உட்பட்ட பல்வேறு நடனங்களை கற்று உள்ளார். மேலும், தன் நடனத்துக்காக பல விருதுகளையும் பெற்று உள்ளார்.
இவர் மலையாள மொழி மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமானர். இவர் தமிழில் வேதம், பாளையத்தம்மன், சபாஷ், கண்ணன் வருவான் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், நடிகை திவ்யா அவர்கள் அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் சுதிர் சேகர் என்பவரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் அவர் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகி விட்டார். மேலும், இவர்களுக்கு அர்ஜுன் மற்றும் மீனாட்சி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதையும் பாருங்க : சிவாஜி மாதிரி கையை வச்சிட்டு நடிக்க கேட்ட இயக்குனர். அப்படியெல்லாம் நடிக்க முடியாது என்று நடிக்க மறுத்துள்ள விஜய்.
நடனத்தின் மீது திவ்யாவுக்கு அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் அமெரிக்காவில் நடன பள்ளி திறக்க வேண்டும் என முடிவு செய்து வந்தார். ஆனால், இவருடைய கணவன் சுதிர் குழந்தையும் மட்டும் பார்த்துக் கொள் இதெல்லாம் தேவை என்று கூறினார். பின் இவர்கள் இருவருக்கும் பெரிய கருத்து வேறுபாடு பயங்கரமாக ஏற்பட்டது. பின்னர் 2016 ஆம் ஆண்டு நடிகை திவ்யா தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். முதல் கணவரை பிரிந்த நிலையில் நடிகை திவ்யா அவர்கள் மும்பையை சேர்ந்த கேரள இளைஞர் அருண் குமார் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
நடிகை திவ்யா ஹூஸ்டன் நகரில் ஸ்ரீ படம் ஸ்க்கூல் ஆப் ஆர்ட்ஸ் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். மேலும், அவர் தான் கற்றுக் கொண்ட பல்வேறு நடனங்களையும் அவர்களுக்கு சொல்லி தருகிறார். தற்போது நடிகை திவ்யா அவர்கள் மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். மேலும்,அவருக்கு அமெரிக்காவிலேயே சமீபத்தில் வளைகாப்பு விழா நடந்து உள்ளது. இந்த விழாவில் அவருடைய அம்மா, மகன், மகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.