பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது போட்டியாளராக மோகன் வைத்யா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணமே இவர் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதம் தான் என்று பலரும் இவரை விமர்சனம் செய்தனர்.

மேலும் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வரை பெண்களை கட்டிப்பிடிப்பது தேவையே இல்லாமல் முத்தம் கொடுப்பது என்று பல சேட்டைகளை செய்து வந்ததார். இதனால் இவர் மற்றுமொரு சினேகன் என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மோகன் வைத்யா இனி பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கவே போவதில்லை என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : சின்னத்தம்பி நடிகைக்கு இரண்டாவது திருமணம்.! மாப்பிள்ளை இவர் தானாம்.! 

Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவள் இவர் வெளியே வந்த பிறகும் சாண்டி இவரைப் போலவே வேடமணிந்து இவரை பங்கமாக கலாய்த்து இருந்தார் .சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மோகன் வைத்யாவிடம் பெண்களை எதற்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு நான் அனைவரையுமே எனது மகளாகத் தான் பார்க்கின்றனர். அதனால் நான் முத்தம் கொடுப்பதில் எதுவும் எனக்கு தவறாக தெரியவில்லை என்று கூறி இருந்தார். மேலும், பிக் பாஸ் விடைதான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து இதுவரை ஒரு எபிசோடை கூட தான் கண்டது இல்லை. கமல் சார் இறுதியாக எனக்கு காண்பித்த அந்த குறும்படமே எனக்கு போதுமானது. நான் நடந்து கொண்ட அனைத்தையும் அந்த வீடியோவில் நான் கண்டு கண்டு விட்டேன். அதனால் மற்ற எபிசோட்களை பார்ப்பது அவசியமற்றதாக நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார் மோகன் வைத்யா.

Advertisement
Advertisement