விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் வில்லனாக இருந்த முத்து ராசாவை யாரோ சுட்டு கொன்றுவிட்டனர்.கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்?’ என்ற கேள்விக்குப் பிறகு இப்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் கேள்வி, ‘முத்துராசுவைச் சுட்டது யாரு?’ என்பது தான். இப்படி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்த சீரியலில் இருந்து ரஷித்தா விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : போன வாரம் ஜாதி, இப்போ மதம் – இவருக்கு பின்னால் யார் தான் இருக்கிறார். மீரா மிதுனின் அடுத்த அடாவடி வீடியோ.

Advertisement

ரஷிதாவிற்கு   கன்னடத்தில் பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்பட்டது. இதனால் ரஷிதாவிடம் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நீங்கள் சீரியலில் இருந்து விலகுகிறார்களா ‘ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்துள்ள ரஷிதா, ஓஹோ இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. chill பண்ணுங்க. எது நடந்தாலும் அது நல்லதுக்குத்தான் என்று பதிலளித்திருக்கிறார்.

ரஷிதாவிற்கு முன்னர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ரக்‌ஷா, ரேஷ்மி தான் நடித்து வந்தனர். ஆனால், இவர்கள் இருவரையுமே இந்த தொடரில் இருந்து அதிரடியாக நீக்கினர். இதுகுறித்து பேட்டி அளித்துள்ள ரக்ஷா, லாக்டௌன் அறிவிச்சதும் பெங்களூரு கிளம்பி வந்தேன். ரெண்டரை மாசம் கழிச்சு ஷூட்டிங்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. அப்ப பெங்களூரு, சென்னை ரெண்டு இடத்துலயுமே பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமா இருந்ததால எங்க வீட்டுல ஷூட்டிங்ல கலந்துக்க வேண்டாம்னாங்க.

Advertisement

சென்னையில தங்கியிருந்தாக்கூட எப்படியாவது ஷூட்டிங்ல கலந்துக்க முயற்சி பண்ணியிருப்பேன். ஸ்டேட் விட்டு ஸ்டேட் வர்றதுல இ-பாஸ் மாதிரியான் நடைமுறைகள் வேற இருந்ததால, `என்னால கலந்துக்க முடியாது’ன்னு சொன்னேன். திரும்ப முழு லாக்டௌன் முடிஞ்சு மறுபடியும் ஷூட்டிங் தொடங்கினப்ப எனக்கு எந்த அழைப்பும் வரலை என்று கூறியுள்ளார். ஆனால், சமீபத்தில் ஷூடிங் துவங்கி இருக்கிறது அதில் ஹீரோ செந்தில் தான் ஆனால், ஒரு ஹீரோயினாக சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவை கமிட் செஞ்சி இருகாங்க. எனக்கு ஒரேயொரு வருத்தம் என்னன்னா, `இதுதான் சூழல், வேற வழி இல்லை’ன்னு எனக்குத் தகவல் சொல்லியிருக்கலாம் என்று வருந்தி இருந்தார்.

Advertisement
Advertisement