போன வாரம் ஜாதி, இப்போ மதம் – இவருக்கு பின்னால் யார் தான் இருக்கிறார். மீரா மிதுனின் அடுத்த அடாவடி வீடியோ.

0
23205
meera
- Advertisement -

சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வந்தார். அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கோலிவுட் மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா.இப்படி ஒரு நிலையில் மீராமிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியிருந்தார். தீ தன்னுடைய முகத்தை காபி செய்கிறார் என்றும், தமிழ் சினிமாவில் எஸ்சி இனத்தை சார்ந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை துரத்த வேண்டும் என்று மீரா மிதுன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் பாருங்க : கொரோனாவால் ஏறிய உடலை குறைத்த தமன்னா – படு கிளாமர் உடையில் கொடுத்துள்ள போஸ்.

- Advertisement -

மேலும் எஸ் சி இனத்தில் இருப்பவர்கள் அனைவரும் தவறான வழியில் செல்வதால் தான் உங்களை எல்லாம் அப்படி பார்க்கிறார்கள் என்றும் மீராமிதுன் பேசி இருந்தார்.இவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது மேலும் இவரை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலரும் கூறி வருகின்றனர். அதே போல மீரா மிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான் ராயல் பேமிலியில் இருந்து வந்தவள். கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னை பற்றி இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், என்னை கைது செய்ய முடியவில்லை. என் மீது எந்த ஒரு வழக்கும் இல்லை, நான் இங்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். என்னை கைது செய்வது என்பது கனவில் தான் நடக்கும் என்றும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் மீண்டும் ஜோ மைக்கேல் மீரா மிதுனின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சாய் பாபா படத்திற்கு அருகில் அமர்ந்து கஞ்சா அடித்து உள்ளார் மீரா. இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜோ மைக்கேல், போன வாரம் ஜாதி, இந்த வாரம் மதம். இந்த வீடியோவை அவர் டெலீட் செய்துவிட்டார். என்ன இதெல்லாம் மோடி ஜி. இவருக்கு பின்னால் யார் இருப்பது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement