பொள்ளாச்சி கொடூரம் குறித்து புட்டு புட்டு வைத்த நக்கீரன் கோபால்.! வீடியோ இதோ.!

By Rajkumar · 12/3/2019

பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், இந்த கயவர்களுக்கு இதை விட பெரிய தண்டனை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

https://www.youtube.com/watch?v=THAjUBv5_aM&feature=youtu.be&fbclid=IwAR1l7ieowL43RGUW5Tg_zR_OGk4GhOUaAscY50H_qubhye9Lez5dL_166QM

அதே போல இந்த வழக்கில் தீர்க்கப்படாத பல்வேறு கேள்விகள் இன்னும் தொக்கி நிற்கின்றன. இந்த குற்றத்தில் சம்மந்தபட்டவர்கள் பணபலமும், அரசியல் பலமும் கொண்டவர்கள் என்ற ஒரு செய்தியும் பரவியது. இந்த பிரச்சினையின் பின்னணியில் அரசியல் இல்லை என்று கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் அவசர பிரஸ்மீட் ஒன்றை ஏற்பாடு செய்து அறிவித்திருந்த போதிலும் மக்களுக்கு அந்த சந்தேகம் இன்னும் முழுமையாக தீரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்க : பொள்ளாச்சி காம வெறியகர்ளை கருடபுராணத்தின்படி இப்படியெல்லாம் தான் தண்டிக்க வேண்டும்.! 

Read more at:

மேலும், நேற்று வெளியான அந்த வீடியோ மட்டும் இல்லாமல் இன்னும் 200 கும் மேற்பட்ட பெண்களின் 1000 கணக்கான வீடியோ இருப்பதாக நக்கீரன் கோபால் தெரிவித்திருந்தார். அவை அனைத்தையும் பார்க்கும் போது ரத்தமே உறைந்து போய் விட்டது என்று நீக்கீரன் கோபால் கூறியுள்ளார். பொள்ளாச்சி சம்பவம் குறித்து அவர் மேலும், கூறியதை வீடியோவில் பாருங்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full