தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் நம்பர் ஒன் நடிகையாக விளங்கி வருகிறார். தற்போது பல்வேரு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நயன், பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று நயன் கூறியதால் பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடிக்கமுடியாமல் போனது.

சமீபத்தில் மலையாள நடிகர் சீனுவாசன் கூட தமிழ் சினிமாவில் நயன்தாராவை விட குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்கள் இருக்கிறார்கள் என்று பேசியிருந்தார். இப்படி நயன்தாரா மீது தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இதையும் படியுங்க : என்னை திருமணம் செய்துகொள்.! ராஜா ராணி சீரியல் நடிகை வீட்டில் ரகளை செய்த ரசிகர்.! 

Advertisement

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நயன்தாரா பேசுகையில், கஜினி படத்தில் நடித்தது தான் நான் எடுத்த தவறான முடிவு. என்னிடம் முருகதாஸ் கதை சொல்லும்போது ஒன்று கூறினார், ஆனால் திரையில் என்னை வேறு விதமாக காட்டிவிட்டார். அதனால் தரப்போதெல்லாம் கதை கேட்கும்போது மிக கவனமாக இருக்கிறேன்.

கஜினி படத்திற்கு பின்னர் கூட நடிகை நயன்தாரா அஜித் நடித்த பில்லா படத்தில் பிகினி காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை அந்த படத்தின் கதையை கூட லேடி சூப்பர் ஸ்டார் சரியாக கேட்கவில்லையோ என்னவோ.

Advertisement
Advertisement